புராண படனம் : அன்றும் இன்றும்

Loading...
Thumbnail Image

Journal Title

Journal ISSN

Volume Title

Publisher

University of Jaffna

Abstract

புராணபடனம் இந்துக்களுடைய சமய வாழ்வோடு இரண்டறக்கலந்து விளங்கிய ஓர் அம்சமாகும். சைவ ஆலயங்களிலே வருடாந்த உற்சவம் ஆரம்பமாவதற்கு முன்னரும், குறிப்பிட்ட சில விரத நாட்களிலும் புரா ணம் படிக்கும் மரபு இன்றும் இருந்துவருகின்றது. கந்தபுராணம், பெரிய புராணம் போன்ற சமய நூல்களையோ அன்றேல் விரதமகிமைகூறும் நூல்களையோ ஒருவர் படிக்க, அதற்கு இன்னொருவர் உரைவிளக்கம் கூறுவதே புராணபடனம் ஆகும். புராணப்படிப்பை விதிப்படி மெய்யன் போடு நியமமாகக் கேட்பவர்கள் நோய் நீக்கம், சத்துருஜயம், புத்திரபாக் கியம் ஆகிய பயன்களைப் பெற்றுப் பலராலும் போற்றப்படுவார்கள் என்ற நம்பிக்கையும் மக்கள் மத்தியிலே நிலவியது. புராணம் படிப்பவர் விதிப்படி படிக்க, அப்படிப்பைக் கேட்பவர் சித்திரப் பாவையின் அத்தக' இருந்து கேட்ட ஒரு காலப்பகுதியே புராணபடனம் செல்வாக்குப் பெற்று விளங் கிய காலமாகும். ஆனால் அப்புராணப் படிப்பானது இன்று சமய வாம் வில் இடம் பெற்றிருந்தபோதும், தான் பெற்றிருந்த செல்வாக்கை மக்கள் மத்தியில் முழுமையாகப் பெற்றிருக்கின்றது என்று கூறிவிடமுடியாது.

Description

Keywords

Citation

Endorsement

Review

Supplemented By

Referenced By