டானியலின் படைப்புக்களில் நடைநயம்
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
University of Jaffna
Abstract
டானியலின் நாவல்களில் யாழ்ப்பாணத்துப் யாழ்ப்பாணத்துப்
பிரதேசக்கிளைமொழிகளும் சாதிக்கிளை மொழிகளும் இணைந்து நின்று அவரின் தனித்த நடைப் பாணியை உருவாக்குகின்ற தன்மையும், அதனூடாகச் சமூக மெய்ம்மை புலப்படுத்தப்படும் விதமும் இந்த ஆய்வினூடாக எடுத்துக்காட்டப்படுகின்றது.
ஈழத்து இலக்கிய வானிலே அறுபது களின் முற்பகுதியில் சிறுகதை ஆசிரிய ராக அடியெடுத்து வைத்த டானியல் உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களின் இலக்கியக் குரலாகத் தன்னை வெளிக் காட்டிக் கொண்டார். "மக்களிடம் படிப்பது அவர்களிடம் படித்ததைப் புடமிட்டு அவர்களுக்கே திருப்பிக் கொடுப்பது" என்ற வார்த்தைகளோடு 1972இல் தனது முதல் நாவலான பஞ்சமரை வெளியிட்ட டானியல் எட்டு நாவல்களையும் பல சிறுகதைகளையும் எழுதியுள்ளார் எனத் தெரிகின்றது.