தமிழ்மொழியில் லகர மெய்யீற்றுப் புணர்ச்சி - அன்றும் இன்றும் 1 -

Abstract

உலகமொழிகள் பலவற்றில் உருபன்கள் அல்லது சொற்கள் ஒன்று டன் ஒன்று இணைந்து வரும்போது தம் வடிவத்தில் மாற்றம் பெறுவது உண்டு. இதனை எழுத்திலும், பேச்சிலும் காண்கிறோம். உருபன் அல்லது சொல் வடிவத்தில் ஏற்படும் இம்மாற்றத்திற்கு அதனை ஒட்டிவரும் பிறவடி வங்களே காரணமாகின்றன. இம்மொழி நிகழ்வைக் (Language Phenomenon) குறிப்பதற்கு உலகப் புகழ்பெற்ற வடமொழி இலக்கண அறிஞரான பாணினி ‘சம்ஹிதா' (Samhita) என்னுஞ் சொல்லைக் கையாண்டுள்ளார். (அஷ்டாத் தியாயி. 1.4:109). இம்மொழி நிகழ்வைத் தற்காலத்து மேலைநாட்டு மொழியியல் அறி ஞர்களும் ஆங்கிலத்திற் 'சந்தி' (Sandhi) என்றே குறிப்பிடுகின்றனர். 2 சந்தியை அகச்சந்தி (internal Sandhi) புறச்சந்தி (External Sandhi) என வகைப்படுத்துகின்றனர். இவை பல உட்பிரிவு களையுடையன (Hockett 1958 : 277).

Description

Keywords

Citation

Endorsement

Review

Supplemented By

Referenced By