யாழ்ப்பாண இராச்சியமும் 1591ஆம் ஆண்டில் இடம்பெற்ற நல்லூர் உடன்படிக்கையும்
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
University of Jaffna
Abstract
ஆண்டில் போர்த்துக்கேயரின் நேரடி ஆதிக் கத்தின் கீழ்ச்சென்றது. யாழ்ப்பாண இராச் சியம் 1619 ஆம் ஆண்டிலே போர்த்துக்கேய ரின் நேரடி ஆட்சியின் கீழ்ச்சென்றது . இவ்விரு இராச்சியங்களிலும் போர்த்துக் கேயரின் ஆதிக்கம் கட்டம் கட்டமாகவே அபிவிருத்தி அடைந்தது. அந்தவகையில் போர்த்துக்கேயருக்கும் யாழ்ப்பாண இராச் சியத்திற்கும் இடையிலான தொடர்பிலும், யாழ்ப்பாண இராச்சியத்தின் அரசியல் வரலாற்றிலும் ஒரு முக்கிய கட்டத்தினைக் குறித்து நிற்பதாக 1591 ஆம் ஆண்டு நல்லூர் உடன்படிக்கை அமைகின்றது.
ரோப்பிய ஆதிக்கப்படர்ச்சியின் தொக்கங்களை மிக ஆரம்பத்தில்
இருந்தே எதிர்கொண்ட நாடு களுள் ஒன்றாக இலங்கை அமைகின்றது . 1498 ஆம் ஆண்டில் இந்தியக் கரையை அடைந்த போர்த்துக்கேயர், பதினாறாம் நூற்றாண்டின் மிக ஆரம்பத்திலேயே இலங்கைக்கும் வந்தனர். அவ்வேளையில் இலங்கையில் மூன்று பிரதான இராச்சியங் களும் பல வன்னிச் சிற்றரசுகளும் இருந் தன: போர்த்தக்கேயரின் ஆரம்பகாலத் தொடர்புகளும், நடவடிக்கைகளும் கரை யோர இராச்சியங்களான கோட்டை, யாழ்ப்பாணம் ஆகியவற்றுடனேயே ஏற்பட் டிருந்தன. காலப்போக்கில் இப்பகுதிகளில் போர்த்துக்கேயரின் ஆதிக்கம் படிப்படியாக வளர்ச்சிபெற்றுச் சென்று இறுதியில் நேரடி ஆட்சி நிறுவப்படுவதையும் காணலாம். இவ்விரு இராச்சியங்களினதும் அரசியல், பொருளாதார, சமூக, சமய நிலைகள் சில வழிகளில் ஒத்த போக்கினையும் சில வழிகளில் வேறுபட்ட பண்புகளையும் உள் ளடக்கியிருந்தன. இதனால் இவ்விரு பகுதி களில் இடம்பெற்ற அரசியல் மாற்றங்களும் ஒத்த, வேறுபட்ட தன்மைகளைக் கொண் டிருந்தன.