சுதந்திர இலங்கையில் கல்வியில் மொழிக் கொள்கை பயன்நோக்கிய சிந்தனைகள்
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
University of Jaffna
Abstract
இலங்கை சுதந்திரம் பெற்று ஐம்பது
ஆண்டுகளின் நிறைவினைப் பொன் விழாவாகக் கொண்டாடும் ஆண்டு இது. 1948 இல் ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்ற காலந்தொட்டு நாட்டின் சுதந்திர அந்தஸ்து க்கு ஏற்ற, "பொருத்தமான”, முறைகளில் பல்வகைத் துறைகளிலும் புதிய கொள்கைகள் வகுக்கப்பட்டமை வரலாறு. சிந்தனைகள் புதிய திசைகளில் செல்வதற்குக் காலாயிருந்த காரணிகளுள் "சுதந்திரம்", "இறைமை", என்ற சித்தாந்தங்கள் முன்னின்றன. அவற்றின் அடிப்படையில் வகுக்கப்பட்ட, வளர்க்கப்பட்ட, கொள்கைகளில் கல்வியில் மொழி பற்றியது பிரத்தியேகமாகப் பிரித்தெடுக்கத்தக்கது. அக்கொள்கை இந்தக் காலகட்டத்துக்கூடாக வளர்ந்த வகையும், முகங்கொடுக்க வேண்டி யிருந்த பிரச்சினைகளும், அவற்றினைத் தாண்டக் கைக்கொண்ட வழிகளும் இன்றும் விமர்சனத்துக்குரியவையாகும்.