இலங்கையின் பணநிரம்பல் வளர்ச்சிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் இடையிலான தொடர்பு பற்றிய ஓர் ஆய்வு
Loading...
Files
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
University of Jaffna
Abstract
இந்த ஆய்வானது இலங்கையின் பணநிரம்பல் வளர்ச்சிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் இடையிலான தொடர்பினை ஆராய்கின்றது. இந்த ஆய்வுக்காக இலங்கையில் 1980-2013க்கும் இடைப்பட்ட காலத்தொடர் தரவுகள் இரண்டாம் நிலைத்தரவு மூலங்களில் இருந்து பெற்றுப் பயன்படுத்தப்பட்டுள்ளன. மாறிகளுக்கிடையிலான தொடர்பானது பல்மாறிப்பிற்செலவு உரு அமைத்துப் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. இப்பல்மாறிப் பிற்செலவு மாதிரியினை அமைப்பதற்கு சாதாரண இழிவுவர்க்க முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆய்வின் முடிவாக ஆய்வின் முடிவாக இலங்கையின் பணநிரம்பல் வளர்ச்சி பொருளாதார வளர்ச்சி க்கும் இடையில் நேர்தொடர்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் பொருளாதார வளர்ச்சியைத் தீர்மானிப்பதில் பணநிரம்பல் ஒரு பொருளுள்ள காரணியாக அமையவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வின் பரிந்துரையாக பணநிரம்பல் பொருளாதார வளர்ச்சினை அதிகரிக்கக் கூடிய வகையில் நாடு புறக்காரணிகளில் கவணம் செலுத்த வேண்டும் என்றும் மேலும் பொருளாதார வளர்ச்சியினை முன்னோக்கி நகர்த்துவற்கு மனிதமூலதன அபிவிருத்தி மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீட்டினை கவருதல் போன்றவற்றில் அதிகம் அக்கறை செலுத்த வேண்டும் என வலியுத்தப்பட்டுள்ளது.