இலங்கையின் வடபகுதிச் சமூகமும் பண்பாட்டு ரீதியான பெண்களுக்கெதிரான வன்முறைகளும்
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
Manarkerni Publications
Abstract
இலங்கைப் பல்லின, பல மத மற்றும் பல்வேறு பண்பாடுகளையும் பின்பற்றக்கூடிய மக்களைக் கொண்ட தீவாகும். இலங்கையில் 12.6 வீதமானவர்கள் இந்து மதத்தைப் பின்பற்றுகிறார்கள். இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். இங்குள்ள பெரும்பாலான தமிழர்கள் இந்து மதத்தையும் அதனூடான பண்பாடுகளையும் பின்பற்றுகிறார்கள். மதத்தையும் அதனூடான பண்பாடுகள் மற்றும் பழக்க வழக்கங்கள் போன்றவற்றை இறுக்கமாகப் பின்பற்றும் போது அது வன்முறையாகப் பரிணமிக்கின்றமையை இவ் ஆய்வு சுட்டிக் காட்டுகின்றது. இவ் ஆய்வில் விடய ஆய்வுமுறை ஓர் ஆய்வு முறையாகப் பின்பற்றப்பட்டுள்ளது. இதற்காக எழுந்த மாதிரியாகப் பத்து (10) மத்திம வயதுப் பெண்கள் தெரிவு செய்யப்பட்டு ஆய்வின் மாதிரியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளனர். அதேவேளை, இரண்டாம் நிலைத் தரவுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. பண்பாட்டு ரீதியாகக் கட்டியமைக்கப்பட்ட கலாசாரமே இன்று வரை பெண்களுக்கெதிரான அனைத்துப் பின்னடைவுகளுக்கும் வன்முறைகளுக்கும் காரணமாக உள்ளது. இதனை சமூகத்திலிருந்து குறைப்பதற்குச் சமூகமயமாக்கல் செயற்பாட்டினூடாகப் பெண் சமத்துவம், பெண் கல்வி என்பவற்றைக் குடும்பத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.