மாணவர்களின் எழுத்தறிவை விருத்தி செய்வதற்கான விசேட முகாம்

Abstract

ஆரம்ப காலங்களில் அறிவேடுகளைத் தேக்கி வைக்கும் பண்டகசாலைகளாக உருவெடுத்த நூலகங்கள் தற்காலத்தில் அறிவை தேடிவரும் அனைத்து வாசகர்களுக்கும் அறிவுத் தாகத்தைத் தீர்த்துவைக்கும் நிலையங்களாக உருவெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகவுள்ளது. நூலகங்களைக் காட்டிலும் விரைவாகவும், துல்லியமாகவும் தகவல்களை அள்ளித்தரும் சாதனங்களாக இணையத்தளங்கள் உருவெடுத்துள்ளபோதிலும் திருத்தமான, நம்பகத்தன்மையுள்ள தகவல்களை ஆதாரபூர்வமாக வழங்குகின்ற நிலையங்களாக நூலகங்கள் விளங்குவதால், இவை சமூகத்தோடு இணைந்த செயற்பாடுகளிலும் ஈடுபட வேண்டியதோடு வருங்கால சமுதாயத்தின் கல்வியறிவினை விருத்தி செய்வதிலும் பங்கெடுக்க வேண்டிய தேவையுள்ளது. அந்த வகையில் ஏறாவூர் நகர சபையினால் பரிபாலிக்கப்பட்டுவரும் அம்பாள் பொது நூலகமானது ஏறாவூர் பிரதேசத்திலுள்ள மட் ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தின் ஆரம்பப்பிரிவில் மெல்லக் ஃ கற்போராக அடையாளம் காணப்பட்ட மாணவர்களுக்கான விசேட வாசிப்பு முகாமினை நடாத்தி வருகின்றது. இச்செயற்றிட்டத்தின் பிரதான நோக்கங்களாக ஏறாவூர் நகரசபை ஆள்புல எல்லைக்குட்பட்ட பிரதேசத்திலுள்ள மாணவர்களின் வாசிப்புத்திறனை மேம்படுதது;தல், சிறந்த கல்விச்சமூகத்தை உருவாக்குதல், கல்வியறிவில் பின்தங்கியோர் சதவீதத்தைக் குறைத்தல், சிறுவர்களுக்கான அடிப்படை உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதில் அக்கறை செலுத்துதல், நாட்டினது நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதில் பங்களிப்புச் செய்தல் போன்றன இனங்காணப்பட்டுள்ளன.

Description

Citation

Collections

Endorsement

Review

Supplemented By

Referenced By