வட இலங்கையின் ஆக்ககாலம் : ஆறுகளையும், குளங்களையும் அடிப்படையாகக் கொண்ட தொல்லியல் ஆய்வு

Loading...
Thumbnail Image

Date

Journal Title

Journal ISSN

Volume Title

Publisher

SANKARA PUBLICATIONS

Abstract

உலக நாகரிகங்கள் மற்றும் பண்பாட்டின் தோற்றமானது புவியியல் அமைவிற்; கேற்ப நதிக்கரையோரங்கள், ஆறுகள், குளங்கள், இலகுவாக நீரைப்பெறக் கூடிய இடங்களினை அண்மித்தே காணப்பட்டன. நாகரிக உருவாக்கம் என்பது பின்வரும் அம்சங்களினை அடிப்படையாகக் கொண்டிருந்தது. 1. மனிதன் நாடோடி வாழ்க்கை முறையினை கைவிட்டு நிரந்தரமான வாழ்க்கை முறைக்கு பொருத்தமான இடங்களில் நிரந்தர குடியிருப்புக்களை அமைத்து ஒரு சமூகமாக செறிந்து வாழத் தொடங்குதல் 2. தமது இருப்பிடங்களுக்கு அண்மையில் குளநீர்ப்பாசன விவசாயம், மந்தைவளர்ப்பு போன்ற நிரந்தர பொருளாதார நடவடிக்கையில் ஈடுபடுதல் 3. சிறுதொழில் நுட்ப வளர்ச்சி 4. ஈமச்சின்னங்களை அமைத்தல் 5. மட்பாண்டங்களின் உற்பத்தி 6. உலோகத் தொழில்நுட்பம் 7. உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுதல் 8. நகரமயமாக்கல் 9. எழுத்தின் தோற்றம் 10. அரச உருவாக்கம். இவ்அம்சங்களினை அளவீடாக கொண்டே நாகரிகங்கள் தோற்றம் பெற்றிருந்தன. உலகில் இந்த மாற்றங்கள் வெவ்வேறு பெயர் கொண்டு அழைக்கப்பட்டாலும் தமிழகத்திலும், இலங்கையிலும் இப்பண்பாட்டு மாற்றம் பெருங்கற்காலப் பண்பாடு (ஆநபயடவீவாவீ௨ ஊரடவரசந) என அழைக்கப்படுகின்றது.

Description

Keywords

Citation

Collections

Endorsement

Review

Supplemented By

Referenced By