தமிழ்மொழிப் பாடநூல்களில் பேச்சுத்தமிழும் எழுத்துத்தமிழும்!
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
University of Jaffna
Abstract
இன்றைய கல்விமுறையில் மாணவர்கள் பாலர் வகுப்பிலிருந்தே ' பேச் சுத்தமிழ்', 'எழுத்துத்தமிழ்' என்பனபற்றி ஏதோ ஒருவகை உணர்வைப் பெறுகிறார்கள். பாலர் வகுப்பிலிருந்து மேல்வகுப்பிற்குச் செல்லச்செல்ல இந்த உணர்வு அதிகரிக்கிறது. எழுதுவதற்கும், நூல்களைப் படித்து விளங் கிக்கொள்வதற்கும் வேண்டிய மொழிவழக்கைத் தாம் அன்றாட வாழ்வில் பேசக் கற்றுவிட்ட வழக்கிலிருந்து படிப்படியாக வேறுபடுத்திக் கற்றுக் கொள்கிறார்கள். மொழியின்பாற்பட்ட இருவழக்குகளையும், நன்கு அறிந்து அவற்றைத் தனித்தனியாகவோ, கலந்தோ, இடம் அறிந்து இயல் பாகக் கையாளும் திறனைப் பெறுதல் ஒருவரது பழக்கத்தில் வருவதாகும். இவை பற்றி மாணவர்கள் தமது வயதிற்கும் வகுப்பிற்கும் ஏற்ப தெளி வாகவும் விரிவாகவும் அறிந்து கொள்வது வேண்டற்பாலதே. இதனாற் போலும் பாடசாலைகளில் பயன்படுத்தப்படும் தமிழ் மொழிப் பாடநூல் களில் பேச்சுத்தமிழ், எழுத்துத்தமிழ் பற்றிப் பேசப்படுகிறது. இவை பற்றி முதன்முதலாகத் 'தமிழ் ஆறாந்தரம்' என்னும் நூலின் முதற் பாடத்திலே பேசப்படுகிறது. இது மிகவும் வரவேற்கத்தக்கதே.