பக்தியை மையப்படுத்தும் திருமுறைகள்- ஓர் ஆய்வு

Loading...
Thumbnail Image

Date

Journal Title

Journal ISSN

Volume Title

Publisher

University of Jaffna

Abstract

பல்லவர் காலமானது பக்தி இயக்க காலம் எனக் கூறும் வகையில் பத்தி கருப்பொருளாகக் காணப்படுகிறது. இதற்கு இக் காலத்தில் தோற்றம் பெற்ற திருமுறைகளின் வகிபங்கு பிரதானமாக்காணப்படுகிறது. திருமுறைகள் பத்தியை மையப்பத்தி அதனூடாக ஆன்மவிடுதலையை அடைவதை நோக்கமாகக் கொண்டிருப்பதனை வெளிக்காட்டுவதுடன் பல்வேறான கலைகளின் வளர்ச்சிக்கும் சமூக ஒருங்கிணைப்பிற்கும் பக்திமரபானது எவ்வாறு அடிநிலையாக அமைந்தது என்பதையும் ஒருங்கே வெளிப்படுத்துவதே இவ் ஆய்வின் நோக்கமாகும். இங்கு ஆய்வு முறையியல்களாக பன்னிரு திருமுறைகளில் காணப்படும் பாடல்வரிகள் பண்புரீதியான முறையில் நோக்கப்பட்டு விபரணரீதியில் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. பல்லவர்கால பக்தி மரபை ஆராயும் வகையில் வரலாற்றுமுறையியல் பயன்படுத்தப்பட்டுள்ளது. பக்தியினூடாக திருவருளை அடைவது மட்டும் நோக்கமாகக்கொள்ளாது சாதி, இன, மொழி, பால்பேதங்களும் களையப்பட்டு சமூக ஒருமைப்பாட்டிற்கும் பக்தி வழிகோலுவதாக அமைகிறது. சாதாரண மானிட வாழ்வில் பேணப்படும் தாய், தந்தை, பக்தி என்பது இறையருளுடன் மட்டும் தொடர்புறாது சாதாரண நடைமுறை வாழ்வியலின் எல்லா அம்சங்களுடனும் தொடர்புறும் ஒன்றாகவும் காணப்படுகிறது.

Description

Citation

Collections

Endorsement

Review

Supplemented By

Referenced By