திருக்குறளில் இசை பற்றிய செய்திகள்
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
Institute of Asian studies, India
Abstract
திருக்குறள் முக்காலத்திற்கும், எந்நாட்டவர்க்கும் எம் மதத்தவர்க்கும் ஏற்ற வகையில் பரந்துபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ள திருக்குறளில் இசை பற்றிய செய்திகள் திருக்குறளில் இசை பற்றிய செய்திகள் கொண்டுள்ள அறிவுச் சுரங்கமாகும். பழந்தமிழ் இலக்கியங்கள் பெரும்பாலும் ,சையை 'ஏழிசை'என்று சிறப்பித்தாலும் திருக்குறளில் ஏழிசை என்று கூறப்படவில்லை. ஆனால் வள்ளுவர் குழல், யாழ், பறை ஆகிய இசைக்கருவிகளை முதன்மைப்படுத்தித் தன்நூலில் கூறியுள்ளமை சிறப்புடையது. ,சைநிலையில் சூழலும் யாழும் ,னியது. என்று குறிப்பிட்டுள்ள வள்ளுவர், சூழலின் பின் யாழை வைத்துள்மை குறிப்பிடத்தக்கது. பழந்தமிழ் மன்னர்களின் அவைக்களங்களில் பெருமைக்குரிய கருவியாகத் திகழ்ந்த யாழ் இசைக்கருவியை, திருவள்ளுவரும் 'குழலினிது யாழ் இனிது'எனச் சிறப்பித்துள்ளார். திருக்குறளில் வில்லைப் போன்று வளைவான யாழ் இருந்தது எனக் குறிப்பிடுகின்றார். இன்னம் மனிதன் தோன்றிய காலம் முதல் இன்று வரை பயன்பாட்டில் உள்ள சிறப்புடைய பறை மற்றும் பண், பாடல் பற்றிய குறிப்புகளும் காணப்படுகின்றன. இந்தவகையில் வள்ளுவர் இசையை பற்றிய கருத்துக்களையும் இசைக் கருவிகள் பற்றிய குறிப்புக்களையும் கூறியுள்ளமை இக்கட்டுரை மூலம் ஆராயப்படுகின்றது.