சங்க இலக்கியங்கள் சுட்டும் செந்நிறம் பண்ணும் அதன் தற்காலப் பயன்பாடும்.

Abstract

இசைக்கு இராகங்கள் இன்றியமையாதவை அவ்வாறான இராகங்களினை அடிப்படையாகக் கொண்ட தென்னிந்திய இசை முறையே உலக இசைமுறைகள் எல்லாவற்றிலிலுமிருந்தும் சிறப்பு வாய்ந்ததாகத் திகழ்கின்றது. அவ்வாறான இராகங்களை யாழ்கள் என்றும், பாலைகள் என்றும், பண்கள் என்றெல்லாம் பலவாறாகப் பண்டைய இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இவ் இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு ஆராய்கின்ற போது பண்டைக்காலத்தில் சுமார் ஆயிரக்கணக்கான பண்கள் பயன்பாட்டில் இருந்ததாக அறியமுடிகின்றது. இவை அக்காலத்தில் ஆதி இசை என அழைக்கப்பட்டதாக தெரிகின்றது. இந்த ஆதி இசையாகிய பண்களை அடிப்படையாகக் கொண்ட பண்ணிசை மரபு தென்றுதொட்டு இன்றுவரை வளர்த்தெடுக்கப்பட்டது. பண்கள் ஆயிரங்களாகக் காணப்பட்ட போதிலும் சங்ககால் இலக்கியங்களின் அடிப்படையில் அவை 103 பண்களாகக் வகுக்கப்பட்டது. இப்பண்கள் பெரும் பண்கள் (ஏழிசை) பண்ணியற்திறங்கள் (ஆறிசை) திறங்கள் (ஐந்திசை) திறத்திறங்கள் (நான்கிசை) என்ற அடிப்படையில் வகைப்படுத்திக் காணப்பட்டது. இவற்றுள் திறப்பண்களுள் ஒன்றாகிய செந்துருத்தி சங்ககாலம் தொட்டு இன்று வரை எவ்வாறு தனித்துவமாகத் திகழ்கின்றது அதிலும் குறிப்பாக தமிழிசை வரலாற்றில் ஓர் அங்கமாகத் திகழ்கின்ற பக்தி இலக்கியங்களில் திருமுறை மிகவும் சிறப்பிடம் பெறுகின்றது. திருமுறையினை அடிப்படையாகக் கொண்டே இன்றுவரை தமிழிசை சிறப்பாக வளர்க்கப்பட்டு வருகின்றமையும் அவற்றினை அடியொற்றி பிற்காலப் பாடல்களும் எழுந்தமை குறிப்பிடத்தக்கது.

Description

Citation

Endorsement

Review

Supplemented By

Referenced By