தமிழ்மொழி கற்றல் கற்பித்தலில் ஒத்தகருத்துள்ள சொற்களும் எதிர்க்கருத்துள்ள சொற்களும்

Abstract

பண்டுதொட்டு மொழிகளில் ஒத்தகருத்துள்ள சொற்கள், எதிர்க் கருத்துள்ள சொற்கள் என்பன பற்றிப் பேசப்பட்டு வருகிறது. மொழிகள் பலவற்றில் இவற்றைத் தரும் அகராதிகளும். நிகண்டு போன்ற பிற நூல்களும் இருக்கக் காண்கிறோம். தமிழ்மொழியில் இலக்கண நூல்கள் ஒக்தகருக்கள்ள சொற்கள் பற்றிக் கூறுகின்றன. சேனாவரையர், நச்சினார்க்கினியர். 2 சிவஞான முனிவர், 3 சங்கர நமச்சிவாயர்4 போன்ற உரையாசிரியர்கள் சொற்பொருள் பற்றி ஆராய்ந்துள்ளனர். சொற்பொருள், சொற்பொருள் உறவு என்பனபற்றிக் காலத் துக்குக் காலம் மெய்யியலாரும், தருக்கவியலாரும், அணியிலக்கண அறிஞரும், இலக்கியத் திறனாய்வாளரும், மொழியியலாரும் வேறு படும் கருத்துக்களைக் கூறியுள்ளனர். அக் கருத்துக்களை இங்கு விரி வாகக் கூறவோ ஆராயவோ முற்படாது, இன்றைய நிலையில் நமது பாடசாலைகளில் தமிழ்மொழி கற்றலிலும் கற்பித்தலிலும் ஒத்தகருத் துள்ள சொற்கள் எதிர்க்கருத்துள்ள சொற்கள் என்பன பற்றிப் பொதுவாக நிலவும் சிந்தனை எத்தன்மைத்து என்பதையும் இவற் றைக் கற்கும் - கற்பிக்கும் முறைகளில் எழும் சிக்கல்கள் யாவை என்பதையும் அறிஞர்களோடு கூடிச் சிந்திப்பதே இவ்வாய்வின் நோக்காகும்.

Description

Keywords

Citation

Endorsement

Review

Supplemented By

Referenced By