"வியன் தில்லைச் சிதம்பரம்" நூல் பற்றிய பொதுநோக்கு
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
தமிழ்நாடு சபாநாயகம் பிரின்டர்ஸ்
Abstract
ஈழநாட்டில் யாழ்தீபகற்பத்தில் மேற்குக்கரையோரத்தில் ஈழத்துச் சிதம்பர எனும் சிறப்புப் பெயர் பெற்ற கோவில் அமைந்திருக்கும் சிவபூமியாம் காரைநகரில் ஆலவாய்க்குருமணியாக சைவசித்தாந்த ஞானியாக விளங்கியிருந்த சுவாமி முருகேசப்பெருமானின் பிரதம சிஷ்யையான "மேருபுத்திரி" ஆசிரியரினால் ஆக்கப்பட்டிருக்கும் பதிகங்களின் நுலே “வியன் "வியன் தில்லைச் சிதம்பரம்” எனும் நூலாகும். சைவபக்தி இலக்கியம் எனும் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு இந்நூல் 2017ம் ஆண்டு சிதம்பரத்தில் முதல் பதிப்பாக தைப்பூச நன்னாளில் தமிழ்நாடு சபாநாயகம் பிரின்டர்ஸ் அச்சகத்தால் வெளியிடப்படுகின்றது. சைவபக்தி இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்ட இந்நூலானது ஞான முக்திபெறும் உரிமையைச் சுட்டிக்காட்டி ஞானவாசகத்தினை பேசியுள்ளமையை இந் நூல் முழுவதும் காணமுடிகின்றது. அத்துடன் கோவில் எனவும் சிறப்பிக்கப்படும் தில்லை சிதம்பரத்தையும் மாணிக்கவாசகரையும், திருவாசகத்தையும் மனதில் நிறுத்தி சைவசித்தாந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதாகவும் தனது குருவின் அருளினாலும் ஆஞ்ஞையாலும் ஆக்கப்பட்ட நுலே "வியன் தில்லைச் சிதம்பரம்” ஆகும். இந்நுால் ஞான திருவாசகம் பெண்களும் முக்திபெறுந்தகைமையைக் கூறும் திவ்ய ஞான நூலாகும். மணிவாசகப்பெருமானின் திருவாசகப்பெருமை, அதனுள்ளும் பெண்ணுயிர்களும் முக்திபெறுந் தகுதியுடைமை எனும் இரண்டு நோக்கங்கள் தில்லை நடராஜப்பெருமானால் ஏற்றுக்கொள்ளப்பட்டமையை இறைவனின் அருளால் ஆசிரியர் தன் கைப்பட எழுதிய சங்கதியை (சைவபக்தி இலக்கியம் பதிகங்களை) உலகிற்கு உணர்த்தும் நோக்கமே இந்நுாலின் ஆக்கத்திற்கு மூலகாரணமாகும் என நூலாசிரியர் நன்கு தெளிவுபடுத்தியிருக்கின்றார்.