தவமணிதேவி : ஆரம்ப கால இந்திய சினிமாவில் ஒரு புதிய இலங்கைப் பெண்

Abstract

1937 - 1947 காலப்பகுதியில், தமிழ்த் திரைப்படங்களில் நடித்த, முக்கியமாக அறியப்பட்ட, பெண் திரைப்படக் கலைஞர்களுள் ஒருவராக இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான தவமணிதேவி விளங்கினார். இக்கலைஞர் யாழ்ப்பாணத்தைப் பூர்விகமாகக் கொண்ட, அக்காலத்தைய உயர் வகுப்பில் இருந்து நடிப்புத்துறைக்கு முன்வந்தவர். இலங்கையின் தமிழ்ப்பெண்கள் வரலாற்றிலே , முதன் முதலாகத் திரையுலகிற் பிரவேசித்தவர். 1930களிலும், 1940களிலும், தமிழ்த் திரையுலகில், அதிக பாராட்டுக்கும், அதிக வரவேற்பிற்கும், அதிக கருத்து மாறுபாடுகளுக்கும், கூடுதலான விமர்சனங்களுக்கும் உட்பட்டவராகவும் இருந்திருந்தார். அவ்வப்போது அவரைப் பற்றிய குறிப்புகள் பத்திரிகைகளில் அல்லது கட்டுரைகளில் வெளிவரும்போது, அவை தவமணிதேவி பற்றிய தவறான கருத்துக்களைப் பிரதிபலிப்பனவாக உள்ளன. இத்தகைய நிலைக்கு அவரைப்பற்றிய முழுமையான விபரங்கள் எவையும் இதுவரை தொகுக்கப்படாதிருப்பதும் ஒரு முக்கியமான காரணமாகும். தவமணிதேவியின் திரையுலக வாழ்வினையும், வரலாற்றினையும் வெளிக் கொணர்வதற்கான ஒரு முதல் முயற்சியாகவே இந்த எழுத்துரை அமைகிறது. பெண் ஆற்றுகைக்கலைஞர் என்றவகையில் இவரது வரலாறும், திரையுலகச் செயற்பாடுகளும் ஆவணப்படுத்தப்படவேண்டியது அவசியமானதாகும். இலங்கைத் தமிழ்ப் பெண்களின் வரலாற்றில், இவர் வாழ்ந்த காலப்பகுதி பல வகைகளில் முக்கியத்துவம் மிக்க காலப்பகுதியாக அமைந்துள்ளது. திரையுலக வாழ்வில் தவமணிதேவியின் அடையாளம் கவனிக்கப்படவேண்டியதுமாகும்.

Description

Citation

Endorsement

Review

Supplemented By

Referenced By