பன்முகப்பங்குதாரர்களின் பங்கேற்புடன் கூடிய ஆவணவாக்கல்: வடமாகாண நீர் வளம் தொடர்பான எண்ணிம சேமவைப்பிட உருவாக்கம்
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
University of Jaffna
Abstract
'பன்முகப்பங்குதாரரின் பங்கேற்புடன்கூடிய அணுகுமுறையூடாக வடமாகாணத்தின் நீர் பாதுகாப்பு பங்காற்றல் செயல் ஆய்வு' எனும் தலைப்பிலான இச்செயற்றிட்டம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஆறு பீடங்களின் கல்வியியளாலர்களையும் மற்றும் சர்வதேச அளவில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் துறைசார் ஆலோசகர்களையும் உள்ளடக்கியது. இலங்கையின் வடபகுதிக்;கான நீர் வளப் பாதுகாப்பை கட்டியெழுப்புவதற்கான இத்திட்டம் 2020ஆம் ஆண்டிலிருந்து கடந்த நான்கு வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது இந்த திட்டமானது மூன்று பிரதான நோக்கங்களின் அடிப்படையில் . செயற்படுத்தப்பட்டுவருகிறது.அவையாவன:அறிவியல்இடைவெளிகளைநிரப்புவதன்மூலம்நீர்வளம் சார்ந்த அறிவுசார் சமூகத்தை உருவாக்குதல்;;;| நீர்ப்பாதுகாப்புத் தொடர்பில் பொருத்தமான தீர்வுகளை முன்வைப்பதற்கென ஒருங்கிணைக்கப்பட்ட சமூகமட்ட பங்கேற்பு மற்றும் கலந்துரை யாடலுக்கான தளத்தினை உருவாக்குதல்;;| சமூகம் சார்ந்த அளவீடுகள், அடைவுகள், மற்றும் பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம் அனைத்து மட்டத்திலும் நீர் வளம் தொடர்பான சமூக விழிப்புணர்வை ஊக்குவித்தல்.
இவற்றுள், முதலாவது நோக்கத்தினை அடைவதற்கான செயல் வடிவமாக வடமாகாணத்தின் நீர் வளம் தொடர்பிலான புலமைசார் ஆவணங்களை உள்ளடக்கிய ஒரு எண்ணிம சேமவைப்பிடத்தை (னபைவையட சநிழளவைழசல) உருவாக்கும் முயற்சி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நூலகத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த ஆவணங்களுக்கான தேடலை மேற்கொள்கையில், அச்சுருவிலான பல ஆவணங்கள் பல்வேறு நூலகங்கள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடத்தில் காணப்பட்ட போதிலும் அவற்றிற்கான அணுகுகை மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தமை அவதானிக் கப்பட்டது. வடமாகாணத்தில் நீர் வளப் பாதுகாப்புத் தொடர்பிலான சுகாதார, சமூக, பொருளாதார மற்றும் கலாசாரப் பிரச்சினைகள் பற்றியும், இப்பிரச்சினைகளுக்கான தீர்வுகள் பற்றியும் வெளிப்படுத்தி நிற்கின்ற அறிவார்ந்த இப்படைப்புகளை ஒருங்கிணைப்பதன் மூலம் பங்குதாரர்களிடையே அறிவுப் பகிர்வு, நீர் பிரச்சினைகள்குறித்தவிழிப்புணர்வு,மற்றும்ஆய்வுச்செயற்பாடுகளுக்குஉதவுவதைஇந்தஎண்ணிமச் சேமவைப்பிடம்குறிக்கோளாகக்கொண்டுள்ளது.