இலங்கையும் இந்து சமுத்திர வர்த்தகமும் (கி. மு.2ம் நூ. - கி. பி. 13ம் நூ. வரை )

Abstract

இலங்கை ஒரு தீவாகப் பரந்தளவிலான நீர்ப்பரப்பினிடையே இந்து சமுத் திரத்தின் மத்தியில் இந்திய உபகண்டத்திற்கு அண்மையில் அமைந்து காணப்படு வதாலே வர்த்தக வரலாற்றில் தனியானதோர் இடத்தை அது பெற்றுள்ளது. அதன் காரணமாகக் கிழக்கேயுள்ள நாடுகளுக்கும், மேற்கேயுள்ள நாடுகளுக்கு மிடையிலான கடல் வர்த்தகப் பாதைகள் சந்திக்கும் இடமாக இலங்கை முக்கியத் துவம் பெற்றுள்ளது. ஒரு புறத்திலே. இத்தாலி, கிரேக்கம், சிரியா, அராபியா, எகிப்து, எதியோப்பியா என்பவையும், மறுபுறத்திலே தென்கிழக்காசிய நாடுகள், சீனா என்பவையும் அமைந்து காணப்படுகின்றன. இவ்வாறு பரந்த அளவிலான தரைப் பிரதேசங்களிடையே நடைபெற்று வந்த கடல் வர்த்தகப் பாதைகள் சந்திக்கும் பிரதான நிலையமாக இலங்கை காணப்படுகிறது. இந்த வகையிலே பெற்றிருந்த கேந்திரத்தானத்தின் விளைவாக இந்து சமுத்திர வர்த்தக வரலாற்றிலே இலங்கை முக்கியமான இடத்தைப் பெற்று விளங்குகிறது. இலங்கை வரலாறானது ஆதிகாலத்திலிருந்தே வர்த்தகத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது. அதனாலே பெருமளவு பாதிப்பைப் பெற்றிருந்தது. இலங்கை வரலாற்றுக்கால ஆரம்பத்தில் ஏற்பட்ட திராவிட ஆரியக் குடியேற்றமும், தென் இந்திய, வடஇந்தியப் பண்பாட்டுப் படர்ச்சியும் அக்காலத்தில் நடைபெற்ற வர்த்தகத்தின் விளைவுகளே. பௌத்த ஜாதகக் கதைகளிலும், மகா பாரதம், அர்த்த சாஸ்திரம், மணிமேகலை போன்ற நூல்களிலும் ஆங்காங்கே காணப்படும் குறிப்புகளிலிருந்து, ஆரம்பகாலத்திலே வர்த்தகம் தொடர்பாக இலங்கை முக்கிய மான இடத்தைப் பெற்றிருந்தது என்பது நன்கு புலனாகும். பிற்பட்ட காலத்தில் எற்பட்ட ஐரோப்பியரின் வருகை கூட இந்த வர்த்தக நோக்கினையே கொண்டிருந் தது. இவ்வாறு நோக்கும் போது இலங்கை வரலாற்றிலே வர்த்தகத்தின் தாக்கம் நன்கு நிலவியதை அவதானிக்கலாம்.

Description

Keywords

Citation

Endorsement

Review

Supplemented By

Referenced By