அறிவுக் களஞ்சியம் : மாதாந்த பத்திரிகைப் புதிர்ப்போட்டி
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
Library, University of Jaffna
Abstract
நூலகம் என்பது பண்டைய காலங்களைப்போல் அறிவேடுகளைத் தேக்கி வைக்கும் களஞ்சிய சாலைகளாக மட்டும் ஒடுக்கப்பட்டு விடாது காலத்தின் தேவைகருதியும் பயனாளிகளுக்கேற்ற வகையிலும் சமூகம் சார்ந்த பல பணிகளைச் செய்ய வேண்டிய கடப்பாட்டிலுள்ளது. இதனடிப்படையில் பொது நூலகங்களாவன தமது பயனபளிகளின் நன்மை கருதி அவர்களுக்குப் பொருத்தமான செயற்றிட்டங்களை அமுல்படுத்தி தம்மோடு இதுவரை காலமும் தொடர்புறாத வாசகர்களை ஈர்க்கும் வகையிலான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியது தற்காலத் தேவையாகவுள்ளது. பொது நூலகங்களைப் பொறுத்தவரையில் சிறுவர்கள், பெரியவர்கள், சிரேஸ்ட பிரஜைகள், விசேட தேவைக்குட்பட்டோர் போன்ற வகையினர் பயனாளிகளாக காணப்படினும் சிறுவர்கள் அதிலும் குறிப்பாக பாடசாலை மாணவர்கள் பத்திரிகை வாசிப்பில் ஈடுபடாமலிருப்பது பெரும் குறைபாடாகவேயுள்ளது. பாடசாலைக் கல்வி முடிவடைந்ததும் தமது உயர்கல்வி குறித்து தீர்மானம் எடுப்பதற்கும், அரச வேலையொன்றினுள் நுழைவதற்கும் பொதுஅறிவு எனும் விடயப்பரப்பு முக்கியமபனதொன்றாக காணப்படுகின்றது. இவ் விடயப்பரப்பு சார்ந்த அறிவை மாணவர்கள் பாடசாலைக்கல்வி மூலம் கற்றுக்கொள்ள முடியாதென்பதால் இதனை இளம்பருவத்திலிருந்து வளர்க்க வேண்டியது நூலக உத்தியோகத்தர்களின் பணியாகின்றது.
இது குறித்து சிந்தித்த ஏறவுர் நகர சபை பொது நூலகங்கள் ஒன்றினைந்து அதன் ஆள்புல எல்லைக்குட்பட்ட இடைப்பிரிவு மாணவர்களை பத்திரிகை வாசிப்பில் ஈடுபடச் செய்து அவர்களின் பொது அறிவினை விருத்தி செய்வதனை பிரதான நோக்கமாகக் கொண்டு மாதந்தோறும் பத்திரிகைப் புதிர்ப்போட்டியொன்றை நடாத்தும் இச் செயற்திட்டம் அமுல்படுத்தப்பட்டது. இதன் மூலம் பாடசாலைப் பருவத்திலிருந்தே மாணவர்களின் பொது அறிவு விருத்தியாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது.