யாழ்ப்பாண பொதுசன நூலகத்தின் விழிப்புலனற்றோர் பிரிவு : ஒரு பார்வை

Abstract

உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிபர தரவுகளின்படி, உலகளவில் சுமார் 39 மில்லியன் பேர் பார்வையற்றவர்களாக காணப்படுகின்றனர். அவர்களில் 82 மானோர் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் மூ என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் பெரும்பாலானோர் குழந்தைப் பருவத்திலோ அல்லது அதன் பின்னரான வளரிளமைப் பருவத்திலோ சுவாச மற்றும் கண் தொற்று நோய்கள் அல்லது தவறான மருத்துவ சிகிச்சை போன்ற காரணங்களால் பார்வையை இழந்தவர்களாவர். இதனால், இவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமூக செயற்பாடுகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் மட்டுப் படுத்தப்பட்டிருப்பதை காணக்கூடியதாகவுள்ளது. முன்னைய காலத்தில், பார்வையற்றவர்கள் கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடுவதும், தொழில் புரிவதும் மிகப்பெரும் சவாலாக காணப்பட்டது. எனினும், நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் சமூக மாற்றங்கள், பார்வையற்றவர்களின் வாழ்க்கையில் புதிய வழிகளைக் காட்டியுள்ளன. இதன் ஒரு அங்கமாக, யாழ் மாநகர சபையும், யாழ் விழிப்புலனற்றோர் சங்கமும் இணைந்து, யாழ்ப்பாண பொதுசன நூலகத்தில் பார்வையற்றோருக்கான பிரிவொன்றை 27.05.2015 அன்று திறந்து வைத்தனர். இப்பிரிவு, பார்வையற்றவர்களுக்கு கல்வி மற்றும் தகவல் அணுகல் வாய்ப்புகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கான சமூகமயமாக்கல் செயற்பாடுகளிலும் முக்கிய பங்கை வகிக்கின்றது.

Description

Citation

Collections

Endorsement

Review

Supplemented By

Referenced By