இலங்கையில் நவீன கல்வியும் கோல்புறூக் விதப்புரைகளும்
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
University of Jaffna
Abstract
இலங்கையில் இன்று வழக்கிலுள்ள கல்வியின் இயல்பினையும் போக்கினையும் எண்ணிப் பார்க்கும் எவரும் இந்நாட்டிற்கே உரிய பழைமையான பாரம்பரியமும் நவீன அனுட்டானங்களும் இணைந் திருப்பதை அவதானிக்கலாம். இந்நிலை ஈராயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் அளவிலான வளர்ச்சிக்கூடாகத் தோன்றிய கூட்டு மொத்த உருவமாகும். எனினும், இதன் தோற்றத்தில் பல்வகைப் பட்ட கட்டங்களைக் காணலாம். ஆரியர் வருகையுடன் ஆரம்பித்து பௌத்தத்தின் செல்வாக்குடன் உருவம் பெற்ற பண்டைய கல்வி அமைப்பு காலச் சுழற்சியில் நாட்டுக்கு வந்த அந்நியர்களின் பண் பாட்டினாலும் தாக்கம் பெற்றது. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர். ஆங்கிலேயர் ஆகிய ஒவ்வொரு இனத்தவரும் எமது கல்வி வளர்ச்சி யில் தத்தம் பங்களிப்பினைச் செய்துள்ளனர். அத்தகைய அம்சங் களின் மொத்த வளர்ச்சியே இலங்கையின் இன்றைய நவீன கல்வி யாகும். இதில் கோல்புறூக் ஆணைக்குழுவினரின் விதப்புரைகளுக் கும் விசேட இடம் உண்டு .